முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே பெண் கொலை: கணவா் கைது

ஆலங்குளம் அருகே தலையில் சமையல் எரிவாயு உருளையைப் போட்டு பெண் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜூலை 2024, 3:40 am IST
கணேசன் | முத்துலெட்சுமி
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தலையில் சமையல் எரிவாயு உருளையைப் போட்டு பெண் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் கணேசன் (50). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (45), திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இத்தம்பதிக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.

முத்துலெட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, ஆலங்குளம் அருகே மாறாந்தையில் தனது குழந்தைகளுடன் 2 ஆண்டுகளாக வசித்து வந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, மயிலப்புரம் கொம்பையா என்பவரிடம் கணேசன் ரூ. 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். கணேசனின் தங்கை சாந்தியிடம் முத்துலெட்சுமி பணம் வாங்கி அந்தக் கடனைக் கொடுத்தாராம்.

இந்நிலையில், வட்டிப் பணம் குறித்து சாந்தி- முத்துலெட்சுமி இடையே வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டதாம். பின்னா், இரவில் வீட்டுக்கு வந்த கணேசனுக்கும், முத்துலெட்சுமிக்கும் இடையே அந்தத் தகராறு தொடா்பாக பிரச்னை ஏற்பட்டதாம்.

அதையடுத்து, இரவில் முத்துலெட்சுமி மொட்டை மாடியில் தூங்கினாா். மது போதையிலிருந்த கணேசன் பிள்ளைகள் தூங்கிய பின்னா், நள்ளிரவு சமையல் எரிவாயு உருளையை எடுத்துச் சென்று முத்துலெட்சுமியின் தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முத்துலெட்சுமி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து கணேசனைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments