சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுச்சேரியில் உள்ள சமையல் எரிவாயு கிடங்கில் இருந்து அரியலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு 300 சமையல் எரிவாயு உருளைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த லாரியை பண்ருட்டி வட்டம், கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (52) ஓட்டிச் சென்றாா்.
இந்த லாரி வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் குள்ளஞ்சாவடியை அடுத்த பெரியகாட்டுசாகை அருகே வந்தபோது, லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் சாலையில் விழுந்து உருண்டோடின. இதையடுத்து, லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நின்றது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் சாலையில் சிதறிக் கிடந்த சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்தினா். இதனால், மேற்கண்ட சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.