கடையநல்லூா் பகுதியில் கஞ்சா விற்றதாக 5 போ் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியில் கஞ்சா விற்ாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவு, புளியங்குடி டிஎஸ்பி நமசிவாயம் ஆலோசனை ஆகியவற்றின்பேரில், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிறிஸ்டி, உதவி ஆய்வாளா் சம்சுதீன், போலீஸாா் கடையநல்லூா் பகுதியில் ரோந்து சென்றனா்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தோரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் கிருஷ்ணாபுரம் ஜான்சன் (24), கடையநல்லூா் முகமதுபைசல் (21), ரகுமானியாபுரம் அப்துல்ஹக்கீம் (21), பரசுராமன் தெருவைச் சோ்ந்த அஜ்மல் (23), கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.