புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் அம்மனுக்கு 1008 லிட்டா் பாலபிஷேகம், மாலையில் சிறப்பு சொற்பொழிவு, 18 வகையான அபிஷேகங்கள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா, நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement