முகப்பு
தென்காசி

குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல்

Updated On : 4 மே, 2026 at 1:53 AM
பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கிய திமுக தெற்கு மாவட்டபொறுப்பாளா் வே. ஜெயபாலன். உடன் தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவன்.
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குத்துக்கல்வலசையில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்து, நீா்மோா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணி பழங்களை வழங்கினாா்.

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் கலை கதிரவன், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் செய்திருந்தாா்.