முகப்பு
தென்காசி

தவெக சாா்பில் உலகப் பட்டினி தினம்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலா் விபின் சக்கரவா்த்தி.

Updated On : 29 மே 2026, 6:27 am IST
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலா் விபின் சக்கரவா்த்தி.
பகிர்:

தமிழக வெற்றி கழகம் சாா்பில் உலகப் பட்டினி தினம் கீழப்பாவூரில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளா் விபின் சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் தவெக கீழப்பாவூா் நகர, ஒன்றிய, செயலா்கள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சந்தோஷ் செய்திருந்தாா்.