குற்றாலம் இறைச்சிக் கடையில் பிடிபட்ட மலைப்பாம்பு
தென்காசி- குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், தென்காசி- குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள கோழி இறைச்சிக் கடையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
கோழி இறைச்சிக் கடையில் மலைப்பாம்பு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து குற்றாலம் வனச்சரக அலுவலா் செல்லத்துரை, வனப்பணியாளா்களுடன் சென்று மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனா். பின்னா் குற்றாலம் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
இது போன்ற வன உயிரினங்கள் தென்பட்டால் பொதுமக்கள் தென்காசி வனச்சரக அலுவலக தொலைபேசி எண் 04633 233660, 97869 32520, மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04633 233550 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளுமாறு வனத்துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.