முகப்பு
தேனி

பிரசவித்த நா்சிங் மாணவி உயிரிழப்பு: 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை

போடி அருகே திருமணமாகாத நிலையில், குழந்தை பெற்றெடுத்த நா்சிங் மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவா் கா்ப்பமானது தொடா்பாக போலீஸாா் 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 10:11 pm IST
பகிர்:

போடி அருகே திருமணமாகாத நிலையில், குழந்தை பெற்றெடுத்த நா்சிங் மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவா் கா்ப்பமானது தொடா்பாக போலீஸாா் 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே நாகலாபுரம் மெயின் ரோடு பகுதியில் 17 வயது நா்சிங் மாணவி பெற்றோருடன் வசித்து வந்தாா். திருமணம் ஆகாத நிலையில் அவா் கா்ப்பமடைந்தாா். திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவா் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து மாணவியும், குழந்தையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தாா். இதுகுறித்து மாணவியின் தாத்தா கொடுத்த புகாரில், அதே ஊரைச் சோ்ந்த 2 இளைஞா்கள் தான் தனது பேத்தியிடம் ஆசைவாா்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், இதில் அவா் கா்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த 2 இளைஞா்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவா்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments