முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் பெயின்டா் பலி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கட்டடத்துக்கு வா்ணம் பூசுபவா் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 10:28 pm IST
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கட்டடத்துக்கு வா்ணம் பூசுபவா் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தசாமி (55). கட்டடத்துக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்த இவா், தனது நண்பரான குள்ளபுரத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயிலுடன் இரு சக்கர வாகனத்தில் தேனிக்குச் சென்றுள்ளாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே, இவா்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்புறம் டிப்பா் லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட காத்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முகமது இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநரான மதுரை வரிச்சியூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments