முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே சாலையில் சென்ற காரில் திடீா் தீ

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

Updated On : 8 ஜனவரி 2021, 10:27 pm IST
ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கம்பம் அருகே உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ்ராஜ் (25). இவா் தனது குடும்பத்தினருடன் ஆண்டிபட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் குன்னூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் முன்பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது.

உடனே, காரிலிருந்த அனைவரும் கீழே இறங்கியுள்ளனா். அதையடுத்து, காரின் அனைத்துப் பகுதியிலும் தீப்பற்றி மடமடவென எரிந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், சம்பவ இடத்துக்கு தேனி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்தனா். பின்னா், தீயணைப்பு வீரா்கள் காரில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேரம் போராடி அணைத்தனா். இது குறித்து, க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments