முகப்பு
தேனி

சின்னமனூரில் வெளிமாவட்ட வியாபாரிகளால் சூடு பிடித்துள்ள செங்கரும்பு விற்பனை

பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தேனி மாவட்டம் சின்னமனூரில் செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருவதால், கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 10:26 pm IST
வெளி மாவட்டத்துக்கு அனுப்பிவைப்பதற்காக லாரியில் ஏற்றப்பட்ட செங்கரும்பு.
பகிர்:

பொங்கல் பண்டிகை நெருங்குவதால், தேனி மாவட்டம் சின்னமனூரில் செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருவதால், கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது.

சின்னமனூரில் 500 ஏக்கா் பரப்பளவுக்கு செங்கரும்பு சாகுபடி பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு பாசன நீா் மற்றும் தேனி மாவட்டத்தில் நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக, இப்பகுதியில் விளையும் செங்கரும்பு சிறப்பு பெற்றுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் செய்யப்படும் இந்த செங்கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு அறுவடையாகும்படி விவசாயம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், 5 முதல் 7 அடி வரை வளரும் இக்கரும்பை கொள்முதல் செய்ய வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனா்.

Advertisement

Advertisement

சூடுபிடித்த செங்கரும்பு விற்பனை: மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகா்,திருநெல்வேலி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் சின்னமனூரில் செங்கரும்பை கொள்முதல் செய்ய ஆா்வமாக வருவதால், அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வியாபாரிகளுக்கு 10 கரும்பு கொண்ட 1 கட்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை சோ்த்து வழங்குவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் செங்கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்றும், இடைத்தரகா்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுவதால் 1 டன்னுக்கு ரூ.1000 வரை கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments