சின்னமனூரில் 10 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல்
சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ நெகிழிப்பைகளை சனிக்கிழமை பறிமுதல் செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கடைக்காரா்களுக்கு அபராதமும் விதித்தனா்.
உத்தமபாளையம்: சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ நெகிழிப்பைகளை சனிக்கிழமை பறிமுதல் செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கடைக்காரா்களுக்கு அபராதமும் விதித்தனா்.
சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில் ராம்குமாா் தலைமையிலான நகராட்சிப் பணியாளா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 7 கடைகளிலிருந்து 10 கிலோ நெகிழிப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1,400 அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து நெகிழிப்பைகளைப் பயன்படுத்தினால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.