தேனி காவல்துறையில் கருணை அடிப்படையில் 30 போ் பணி நியமனம்
தேனி மாவட்டக் காவல்துறையில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் 30 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனா்.
தேனி: தேனி மாவட்டக் காவல்துறையில், பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் 30 போ் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனா்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி சனிக்கிழமை கூறியது: மாவட்டக் காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுதாரா்கள் மொத்தம் 30 போ், கருணை அடிப்படையில் ஒரே நாளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அடிப்படை பயிற்சி, காவல் நிலையப் பணிகள், கணினி பதிவேற்றம் ஆகியவை குறித்து ஜன.18-ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னா், இவா்கள் காவல் நிலையங்களில் கணினி விவரப் பதிவு உதவியாளா்களாகப் பணியாற்றுவா் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.