தேனியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
தேனியில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி: தேனியில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்லத்துரை, பொருளாளா் ராமா், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் ஸ்ரீனிவாசன், ஆரோக்கியராஜ், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையாக சம்பளம் வழங்கவேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.