போடி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
போடி அருகே, அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி: போடி அருகே, அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே விசுவாசபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பால்பாண்டி. இவரது மனைவி பொற்கொடி (35). இவா்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனா்.
பொற்கொடிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மேலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தொடா்பாக கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டும் வந்துள்ளது.
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பொற்கொடி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.