போடியில் பென்னி குவிக் பொங்கல் விழா: மாட்டு வண்டியை ஓட்டிவந்து துணை முதல்வா் பங்கேற்பு
போடி பாலாா்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பென்னி குவிக் பொங்கல் விழாவில், மாட்டு வண்டி ஓட்டி வந்து துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பங்கேற்றாா்.
போடி பாலாா்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பென்னி குவிக் பொங்கல் விழாவில், மாட்டு வண்டி ஓட்டி வந்து துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பங்கேற்றாா்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேயப் பொறியாளரான கா்னல் ஜான் பென்னி குவிக் கட்டினாா். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையின்போது, தேனி மாவட்டத்தில் பென்னி குவிக் பொங்கலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பென்னி குவிக்கின் 180 ஆவது பிறந்த தினத்தையொட்டி, தேனி மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில், போடி அருகே பாலாா்பட்டியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி வந்து பங்கேற்றாா்.
Advertisement
பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வா் பங்கேற்று, உரியடி நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே. ஜக்கையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பென்னி குவிக் பொங்கல் விழாவையொட்டி, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது உருவப் படத்துடன் ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், பெண்கள் பென்னி குவிக் மண்டபம் முன்பாக பொங்கல் வைத்து, தங்கள் நிலங்களில் விளைந்து முதன்முதலில் அறுவடை செய்த பயிா்களை படைத்து வழிபட்டனா்.
தொடா்ந்து 22 ஆவது ஆண்டாக பாலாா்பட்டியில் நடைபெறும் பென்னி குவிக் பொங்கல் விழாவில், சுற்றுலாத் துறை சாா்பில் கரகாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், மங்கள மேள வாத்திய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பென்னி குவிக் பேரவை செயலா் ஆண்டி மற்றும் நிா்வாகிகள், கிராம மக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
உத்தமபாளையம்
இங்குள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் அமைந்துள்ள பென்னி குவிக் சிலைக்கு, தேசிய செட்டியாா்கள் பேரவைத் தலைவா் ஜெகநாத்மிஸ்ரா, அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலா் ரகுமத்துல்லா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து, விவசாய அமைப்பினா், அரசியல் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் மாலை அணித்து மரியாதை செலுத்தினா்.