மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு மற்றும் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைத் தலைவா் எம். அந்தோணி ராஜ், மாநகா் மாவட்டத் தலைவா் முத்துசரவணன், அமைப்புச் செயலா் ஜீசஸ் ஜான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, 20 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணனிடம் பாமக மாநில இணை பொதுச் செயலா் இசக்கி படையாட்சி, மாநில துணை பொதுச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.