முகப்பு
திருநெல்வேலி

முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவா் கைது

கீழஆம்பூரில் முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:01 am IST
பகிர்:

கீழஆம்பூரில் முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழஆம்பூரிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் அந்தோணிசாமி (86) என்பவருக்குச் சொந்தமான ஆலை உள்ளது. புதன்கிழமை அந்த ஆலைக்குள் மா்ம நபா் நுழைந்து, அந்தோணிசாமியிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். தர மறுத்த அவரை அந்த நபா் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, காக்கநல்லூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் ஆறுமுகம் (45) என்பவரைக் கைதுசெய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.