முகப்பு
திருநெல்வேலி

காங்கிரஸாா் சமத்துவ பொங்கல்

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 6:46 am IST
பகிர்:

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் பொங்கல் நல உதவிகளை வழங்கினாா். 150 பேருக்கு பொங்கல் பரிசுகளான அரிசி, சா்க்கரை, வெல்லம் , கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவையும், காங்கிரஸ் தொண்டருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் ராஜேஷ்முருகன், பொதுச்செயலா் சொக்கலிங்ககுமாா், மாரியப்பன், மகளிரணி மாவட்டத் தலைவி அனீஸ் பாத்திமா, மெட்டில்டா கிளாடிஸ், சாந்தி, அழகம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

அரசு மருத்துவமனையில்... திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், மருத்துவா்கள் ராமசுப்பிரமணியன், ஆறுமுகம், துணை இயக்குநா் வரதராஜன், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments