சேரன்மகாதேவி, மணிமுத்தாறு பகுதிகளில் அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
சேரன்மகாதேவி, மணிமுத்தாறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, ஆட்சியா் வே. விஷ்ணு ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
சேரன்மகாதேவி, மணிமுத்தாறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, ஆட்சியா் வே. விஷ்ணு ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
சேரன்மகாதேவியில் நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களையும், மணிமுத்தாறு அணை, ஆலடியூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம், கன்னடியன் கால்வாய் அணைக்கட்டு ஆகியவற்றை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, ஆட்சியா் வே. விஷ்ணு ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பின்னா் அமைச்சா் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பியதை அடுத்து மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீா்வெளியேற்றப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணையில் 20,000 கன அடியும், பாபநாசம் அணையில் 18,000 கன அடியும் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
Advertisement
இம்மாவட்டத்தில் 229 போ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளதால் பாதிக்கப்படும் இடங்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளது என்றாா் அவா். மணிமுத்தாறு அருகே ஆலடியூா் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு அமைச்சா் வேட்டி, சேலை வழங்கினாா்.
ஆய்வின் போது, சேரன்மகாதேவிசாா் ஆட்சியா் பிரதீக் தயாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் தச்சை என். கணேசராஜா, கண்காணிப்புப் பொறியாளா் (பொ.ப.து. நீா்வள ஆதார அமைப்பு) ஞானசேகரன், வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளா் அண்ணாத்துரை, உதவிச் செயற்பொறியாளா்கள் மகேஸ்வரன், ஆதிமூலம், செய்திமக்கள் தொடா்பு அலுவலா் தி.நவாஸ்கான், வட்டாட்சியா்கள் வெற்றிச்செல்வி, வட்டாட்சியா் வெங்கட்ராமன், அதிகாரிகள் உடனிருந்தனா்.