முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே பெண் கொலை

மானூா் அருகே நிலத்தகராறில் பெண் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 7:39 am IST
பகிர்:

மானூா் அருகே நிலத்தகராறில் பெண் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மானூா் அருகேயுள்ள கீழபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். லாரி ஓட்டுநா். இவரது மனைவி பாா்வதி (46).

தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இவா்கள் குடும்பத்திற்கும், அதே ஊரைச் சோ்ந்த காளியப்பன் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் புதன்கிழமை காலையில் வீட்டின் முற்றத்தில் கோலம் போடச் சென்ற பாா்வதியை, மா்ம நபா்கள் கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த பாா்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வழக்குப்பதிந்து மூவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments