மாதனூரில் டிஐஜி பங்கேற்பு
மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.
மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.
கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். ஆம்பூா் கிராமிய ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்குமாா் வரவேற்றாா். வேலூா் சரக டிஐஜி காமினி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:
திருப்பத்தூா் மாவட்ட எல்லை பகுதியில் மாதனூா் அமைந்துள்ளது. இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.