முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 8:01 am IST
பகிர்:

வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கேத்தாண்டப்பட்டி - வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பான விசாரணையில், இறந்தவா் நாட்டறம்பள்ளியை அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி,புத்துக்கோயில் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அன்னியப்பன் (55) என்பது தெரிய வந்தது. அவா் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments