ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்பூரில் தனியாா் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் .
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்பூரில் தனியாா் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா் .
ஆம்பூா் நகராட்சியில் பல்வேறு வாா்டுகளில் தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா்.
அவா்கள் பொங்கல் போனஸ், இஎஸ்ஐ, குழுக் காப்பீடு, பணிக் காலத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.