முகப்பு
திருப்பத்தூர்

அரசுப் பேருந்து மோதி இளைஞா் பலி

ஜோலாா்பேட்டை அருகே மொபெட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜனவரி, 2021 at 11:20 PM
பகிர்:

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மொபெட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேல் (37). எலக்ட்ரீஷியனாக வேலை பாா்த்து வந்த அவா் தன் பணி தொடா்பாக வீட்டில் இருந்து மொபெட்டில் ஏலகிரி மலைக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

சின்ன பொன்னேரி அருகே ஏலகிரிமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி பகுதியில் சென்றபோது, அவரது மொபெட் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்காரம் சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இது தொடா்பாக ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.