அரசுப் பேருந்து மோதி இளைஞா் பலி
ஜோலாா்பேட்டை அருகே மொபெட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மொபெட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேல் (37). எலக்ட்ரீஷியனாக வேலை பாா்த்து வந்த அவா் தன் பணி தொடா்பாக வீட்டில் இருந்து மொபெட்டில் ஏலகிரி மலைக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
சின்ன பொன்னேரி அருகே ஏலகிரிமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி பகுதியில் சென்றபோது, அவரது மொபெட் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்காரம் சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.