வெறிநாய் கடித்த 2 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு சிகிச்சை
திருத்தணி அருகே வெறிநாய் கடித்த 2 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு
திருத்தணி அருகே வெறிநாய் கடித்த 2 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
÷திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது முருக்கம்பட்டு காலனி.
÷இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
Advertisement
Advertisement
÷இப்பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் தெரு நொய்கள் சுற்றித் திரிகின்றன.
÷அவற்றில் பெரும்பாலும் வெறிநாய்களாக உள்ளன. அவை அப்பகுதியில் நடந்து செல்வோரை விரட்டிக் கடித்து வருகிறது.
÷கடந்த வாரத்தில் மட்டும் 20 பேரை வெறிநாய் கடித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
÷இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் சாமிநாதன் என்பவரின் மகள் கன்னியம்மாள் (4) மற்றும் ராமு மகள் தேன்மலர் (3) ஆகிய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.
÷அப்போது அக்குழந்தைகளை வெறிநாய் கடித்தது.
÷மேலும் அந்த காலனி தெருவில் நடந்து சென்ற மகேஷ் (40), ஏழுமலை (50), பாலா (60), சாமிநாதன் (40), சுப்பிரமணி (43) உள்பட 10 பேரை ஒரே நாளில் வெறிநாய் கடித்துள்ளது.
÷அவர்கள் அனைவரும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
÷இவர்களில் 9 பேர் சிகிச்சைப் பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினர்.
÷எனவே முருக்கம்பட்டு காலனி கிராமத்தில் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.