முகப்பு
திருவள்ளூர்

வெறிநாய் கடித்த 2 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு சிகிச்சை

திருத்தணி அருகே வெறிநாய் கடித்த 2 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:23 am IST
பகிர்:

திருத்தணி அருகே வெறிநாய் கடித்த 2 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

÷திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது முருக்கம்பட்டு காலனி.

÷இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

Advertisement

Advertisement

÷இப்பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் தெரு நொய்கள் சுற்றித் திரிகின்றன.

÷அவற்றில் பெரும்பாலும் வெறிநாய்களாக உள்ளன. அவை அப்பகுதியில் நடந்து செல்வோரை விரட்டிக் கடித்து வருகிறது.

÷கடந்த வாரத்தில் மட்டும் 20 பேரை வெறிநாய் கடித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

÷இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் சாமிநாதன் என்பவரின் மகள் கன்னியம்மாள் (4) மற்றும் ராமு மகள் தேன்மலர் (3) ஆகிய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

÷அப்போது அக்குழந்தைகளை வெறிநாய் கடித்தது.

÷மேலும் அந்த காலனி தெருவில் நடந்து சென்ற மகேஷ் (40), ஏழுமலை (50), பாலா (60), சாமிநாதன் (40), சுப்பிரமணி (43) உள்பட 10 பேரை ஒரே நாளில் வெறிநாய் கடித்துள்ளது.

÷அவர்கள் அனைவரும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

÷இவர்களில் 9 பேர் சிகிச்சைப் பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினர்.

÷எனவே முருக்கம்பட்டு காலனி கிராமத்தில் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments