முகப்பு
உலகம்

வெனிசுவேலா நிலநடுக்கம்: அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமானது பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 4:54 pm IST
மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள். - படம் - ஏபி
பகிர்:

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பேர் மாயமான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை (ஜூன் 24) வெனிசுவேலாவில் ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்தன.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியானதாகவும் லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கைகள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. மீட்புப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

முன்னதாக, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 146 பேர் வெனிசுவேலாவின் லா குவைரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். 7 குழந்தைகள், 19 பெண்கள் உள்பட மொத்தம் 146 வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த அகதிகள் அந்த விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்கள் அங்கு வந்து சேர்ந்த சில மணி நேரங்களிலேயே இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் அந்த விடுதிக் கட்டடமும் இடிந்து தரை மட்டமானது.

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், மாயமான நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

summary

The news that more than a hundred people deported from the United States have gone missing following the earthquake in Venezuela has caused shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments