வேளாண் விதைப் பண்ணை கண்காணிப்பாளர் தற்கொலை
திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு வேளாண் விதைப் பண்ணையில் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் விஷம்
திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு வேளாண் விதைப் பண்ணையில் பணிபுரிந்து வந்த கண்காணிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
÷திருவள்ளூரை அடுத்த தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி (42). கொழுந்தளூரில் உள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
÷இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், அஜய், கிஷோர் என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
Advertisement
Advertisement
÷தங்கமணிக்கு பிறவிலேயே கால் ஊனம் இருந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓர் விபத்தில் அதே காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.÷இதனால் அவர் தினமும் வலியில் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை காலையில் கிராம மக்கள் விதைப் பண்ணைக்கு வந்துள்ளனர்.
÷அப்போது அங்கு தங்கமணி வாயில் நுரையுடன் இறந்து கிடந்ததாகத் தெரிகிறது.
÷ இது குறித்த புகாரின் பேரில், புல்லரம்பாக்கம் போலீஸார் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
÷தங்கமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
÷மேலும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.