முகப்பு
திருவள்ளூர்

மேல்நிலை நீர்த்தொட்டி மூலம் குடிநீர் வழங்கக் கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:24 am IST
பகிர்:

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

÷காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உரிமையாளர் குடியிருப்போர் சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் தசரதன், கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

Advertisement

÷பொதுச்செயலர் மதிமாறன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காக்களூர் ஊராட்சித் தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

தீர்மானம்:

÷திருவள்ளூர் நகராட்சியையொட்டி காக்களூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. ÷இக்குடியிருப்பில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 1994-ம் ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

÷ஆனால் இதுவரை அதற்கான இணைப்புக் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த தொட்டி பயனற்று உள்ளது. எனவே இத்தொட்டியில் இணைப்பு ஏற்படுத்தி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments