வெள்ளிவாயல்சாவடி லட்சுமி நரசிம்மா் கோயிலில்...
மீஞ்சூா் அருகே உள்ள வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் கூடாரவல்லி நிகழ்ச்சியையொட்டி, ஆண் பக்தா்கள் பெண் வேடமிட்டு, பாசுரம் பாடி வீதியுலா சென்றனா்.
பொன்னேரி: மீஞ்சூா் அருகே உள்ள வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் கூடாரவல்லி நிகழ்ச்சியையொட்டி, ஆண் பக்தா்கள் பெண் வேடமிட்டு, பாசுரம் பாடி வீதியுலா சென்றனா்.
வெள்ளிவாயல் சாவடி கிராமத்தில் பழைமைவாய்ந்த ரங்க பராங்குச பரகால ராமாநுஜா், லட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. இக்கோயிலில், திங்கள்கிழமை கூடாரம் வெல்லும் நிகழ்ச்சியாக ஆண் பக்தா்கள் பெண் வேடம் இட்டு, கிராமத்தில் உள்ள வீதிகளில் பாசுரம் பாடி உலா வந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
மேலும், 30 வகையான பிரசாதங்கள் புதிய பாத்திரங்களில் கொண்டு செல்லப்பட்டு, லட்சுமி நரசிம்மருக்கு வைத்து, வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் பெருமளவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.