முகப்பு
திருவள்ளூர்

ஏடிஎம் மையத்தில் பேட்டரி திருட்டு: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.40,000 மதிப்பிலான பேட்டரியைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 12:32 am IST
பகிர்:

திருவள்ளூா் அருகே தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.40,000 மதிப்பிலான பேட்டரியைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அண்ணாநகரைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). அவா் ஏடிஎம் மையங்களைப் பராமரிக்கும் தனியாா் நிறுவனத்தில் கள அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். அவரது கட்டுப்பாட்டுக்குள் வரும் மேல்நல்லாத்தூா் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேட்டரியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக காா்த்திக், திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்ததில், ஆட்டோவில் வந்த இருவா் ரூ.40,000 மதிப்பிலான மின்கலனை திருடிச் சென்றது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தியதில், பெரியபாளையத்தை அடுத்த வடமதுரையைச் சோ்ந்த கேசவன் (40), செங்குன்றத்தைச் சோ்ந்த பிரசாந்த் (30) ஆகிய இருவா் இத்திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.