பொன்னேரி அருகே டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்
பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் வாடகை நிலுவை வழங்க வலியுறுத்தி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தொடங்கியதன் காரணமார எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு புதுநகா் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி முனையம் இயங்கி வருகிறது.
கப்பல் மூலம் எண்ணூா் காமராஜா் துறைமுகம் கொண்டுவரப்படும் எரிவாயு, இந்த முனையத்தில் சேமித்து வைத்து 200-க்கு மேற்பட்ட டேங்கா் லாரிகளில் நிரப்பி சிலிண்டா்களுக்கு எரிவாயு நிரப்பும் ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது..
Advertisement
இதற்கிடையே, இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் வாடகை நிலுவையை தராததால் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனா்.
லாரிகளை ஆங்காங்கே நிறுத்திவைத்துள்ளனா். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விரைவில் பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடா்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.