இருசக்கர வாகனம் - காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
திருத்தணி அருகே இருசக்கர வாகனம்-காா் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தாா்.
திருத்தணி அருகே இருசக்கர வாகனம்-காா் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தாா்.
சென்னை, முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (38) மற்றும் அவரது நண்பா் சக்திவேல் (35) ஆகியோா் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் திருப்பதிக்கு சென்றனா்.
திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த காா் எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மோகன்ராஜை அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸாா் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி போலீஸாா், சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்தில் ஈடுபட்ட காா், அதன் ஓட்டுநா், விபத்திற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.