முகப்பு
திருவாரூர்

காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

திருவாரூர் அருகே பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தடை விதித்த மாவட்ட காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:16 pm IST
பகிர்:

திருவாரூர் அருகே பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தடை விதித்த மாவட்ட காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் வீரசேனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குறிச்சிமூலை ஊராட்சி நடுவக்களப்பால்  கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால், அப்பகுதியில் அமைதியின்மையும், அச்சமும் நிலவி வருகிறது.

Advertisement

Advertisement

 மாவட்டக்குழு சார்பில் ஆக. 26-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments