கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என
வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க வட்டத் தலைவர் வி. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
வட்டச் செயலர் எஸ். குருநாதன், வட்ட இணைச் செயலர் ஆர். முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement
Advertisement
சங்க மாநிலப் பொதுச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் இ. ஜெயபாஸ்கர், வருவாய்த் துறை அலுவலர் சங்க வட்டச் செயலர் ஆர். கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.