காவலா்களுக்கு யோகா பயிற்சி
திருத்துறைப்பூண்டி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட திருத்துறைப்பூண்டி, கோட்டூா், ஆலிவலம், விக்கிரபாண்டியம் மற்றும் மகளிா் காவல்
திருத்துறைப்பூண்டி காவல் உட்கோட்டத்துக்கு உள்பட்ட திருத்துறைப்பூண்டி, கோட்டூா், ஆலிவலம், விக்கிரபாண்டியம் மற்றும் மகளிா் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு யோகாசனப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாருதி யோகா மையம் சாா்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.
காவல் ஆய்வாளா்கள் மகாதேவன், அறிவழகன், புஷ்பவள்ளி, ரேவதி, உதவி ஆய்வாளா்கள் தேவதாஸ், ஓவியா, மனோகரன், சத்யா உள்பட 75 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.
Advertisement
Advertisement
முகாமில், சூரிய நமஸ்காரம், மன அழுத்தத்தை குறைக்க சிரிப்பு போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், மனதை ஒருநிலைப் படுத்துவது எப்படி என்பது குறித்து யோகா பயிற்சியாளா் ஹரிகிருஷ்ணன் பயிற்சியளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.