முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் நடத்தி வருவது ஒரு கார்ப்பரேட் கம்பெனி: செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் அதிமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தது குறித்து...

Updated On : 4 ஜூலை 2026, 10:35 am IST
எடப்பாடி பழனிசாமி | செங்கோட்டையன் - கோப்புப் படம்
பகிர்:

எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் அதிமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

ஊழல் சக்திகளையும் தீய சக்திகளையும் தவெக இணைத்துக் கொண்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நடத்தியதுதான் இயக்கம். இப்போது இபிஎஸ் நடத்திக் கொண்டிருப்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அவர் மகன் உள்ளிட்ட 5 பேரின் கருத்துகளை மட்டும் அவர் கேட்பதாலேயே, ஒவ்வ்வொருவராக ராஜிநாமா செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

வழக்கு போடுவது வேறு; தண்டனைக்குட்படுவது வேறு. எல்லோர் மீதும்தான் வழக்கு போடுகின்றனர். தண்டனைக்குட்பட்டவர்களா என ஆய்வு செய்ய வேண்டும். ஆகையால், தண்டனைக்குட்பட்டவர்களைக் கட்சியில் சேர்ப்பதுதான் தவறு என்று தெரிவித்தார்.

மேலும், தவெகவில் இணைவதற்கு மிரட்டப்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, தவறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் ராஜிநாமா செய்ய வேண்டும் எனச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை.

யார் வற்புறுத்தினார்கள் என்று அவர் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

summary

Minister Sengottaiyan criticizes the AIADMK led by Edappadi Palaniswami, describing it as a corporate company

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments