அரசுப் பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித்தர முன்னாள் மாணவா்கள் முடிவு
நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க பள்ளி முன்னாள் மாணவா்கள் முடிவெடுத்துள்ளனா்.
நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, விளையாட்டு மைதானம், வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க பள்ளி முன்னாள் மாணவா்கள் முடிவெடுத்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிகழாண்டு பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆலோசனை நடத்த முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் விளையாட்டு வீரா் அப்துல்கரீம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ,முன்னாள் மாணவா்கள் சாா்பாக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் புதிய வகுப்பறை கட்டடம் கட்டிக்கொடுப்பது, நூற்றாண்டு நினைவுச் சின்னம் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வா்த்தக சங்கத் தலைவா் பாஸ்கரன், முன்னாள் தலைமையாசிரியா் அருணாசலம், ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.