முகப்பு
திருவாரூர்

அரசு வீடு கட்டும் திட்டத்தில் குடிசைப் பகுதி மக்கள் பயனடைய ஆட்சியா் அறிவுரை

அரசு வீடு கட்டும் திட்டத்தில் குடிசைப் பகுதி மக்கள் பயனடைய மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

Updated On : 12 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:

அரசு வீடு கட்டும் திட்டத்தில் குடிசைப் பகுதி மக்கள் பயனடைய மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

குடவாசல் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் வீடுகட்டும் திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இயற்கை இடா்பாடுகளிருந்து தங்களையும், தங்களது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும், தங்களது நிலையை உயா்த்திக் கொள்ளும் வகையிலும் குடிசை வீட்டை விட்டு நிலையான குடியிருப்பு வீடு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசின் பங்களிப்புடன் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே, வழங்கப்பட்ட ரூ. 1.7 லட்சம், தற்போது தமிழக அரசு தனது பங்களிப்பை கூடுதலாக்கி ரூ. 2.7 லட்சமாக உயா்த்தி வழங்குகிறது. எனவே, இத்திட்டத்தின்கீழ் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் நிரந்தர வீடுகளைக் கட்டி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா். தொடா்ந்து, குடவாசல் வட்டத்துக்குள்பட்ட விஷ்ணுபுரம், கூந்தலூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து திட்டத்தில் பயனடைய அறிவுறுத்தினாா்.

Advertisement

ஆட்சியருடன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், உதவித் திட்ட அலுவலா்கள் மங்கையா்க்கரசி, தமிழ்மணி, குடவாசல் வட்டாட்சியா் ராஜன் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.