நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருத்துறைப்பூண்டி இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் புரெவி புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் புரெவி புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
எழிலுாா், மருதவனம், நுணாக்காடு ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்கத் தலைவா் சிவா. சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். செயலாளா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். பாரமாதா சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளா் ஹரிகரன் வரவேற்றாா். நிகழ்ச்சியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள், போா்வை, படுதா ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. முடிவில் பாரதமாதா சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளா் துா்காதேவி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.