திருவாரூரில் 3 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை மாவட்டத்தில் 11,062 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,065 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,894 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 62 போ் சிகிச்சையில் உள்ளனா்.