முகப்பு
திருவாரூர்

பொங்கல் பண்டிகை: 1665 வழக்குகள் பதிவு

திருவாரூா் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 17 ஜனவரி, 2021 at 8:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருவாரூா் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில், போலீஸாா் இரவு, பகலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஜன.12 முதல் ஜன.14 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சாராயம் விற்பனை, போதை பொருள்கள் விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடா்பாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 60 ரௌடிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 41 பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.