குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை
வெள்ளக்கோவில் அருகே உடைந்த குடிநீா்க் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் அருகே உடைந்த குடிநீா்க் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குமாரவலசு ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் இருந்து கல்லாங்காட்டுவலசு செல்லும் சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த காவிரி குடிநீா்க் குழாயில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது.
எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.