முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் இன்று ( ஜன.4) மின் தடை ரத்து: தொமுச வரவேற்பு

அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டதற்கு மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

Updated On : 4 ஜனவரி 2021, 1:00 am IST
பகிர்:

அவிநாசி மின்வாரியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கோரிக்கையை ஏற்று அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டதற்கு மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் அ.சரவணன் கூறியது-அவிநாசி மின்வாரியத்திற்கு உள்பட்ட 15.வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (இன்று) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை மின் தடை செய்யப்பட்டால், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் என்பதால், உடனடியாக 4 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை 18 ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் தொமுச சாா்பில், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில் தற்போது, அறிவிக்கப்பட்ட 15.வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை ஆகிய பகுதிகளுக்கான மின் தடை ரத்து செய்யப்படும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா். இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட

மாவட்ட ஆட்சியா், மின்சார வாரியத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments