ஆட்ட நாயகன் விருதுக்கு ஸ்பென்சர் ஜான்சன்தான் தகுதியானவர்: மிட்செல் மார்ஷ்
வங்கதேசத்து எதிரான கடைசி டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மிட்செல் மார்ஷ் பேசியிருப்பதாவது...
வங்கதேசத்து எதிரான கடைசி டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மிட்செல் மார்ஷ், “நான் எப்படி இந்த விருதுக்குத் தேர்வானேன் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஸ்பென்சர் ஜான்சனுக்குதான் இந்த விருது சென்றிருக்க வேண்டும்” எனக் கூறினார்.
சட்டோகிராமில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்து பேட்டிங் விளையாடிய ஆஸி. 11 ஓவர்களில் 112/3 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் 60 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். போட்டிக்குப் பிறகு அவர் பேசியிருப்பதாவது:
3-0 என தொடரை வெல்வது சிறப்பானது. எங்களது வீரர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம்.
நான் எப்படி ஆட்ட நாயகன் விருதுக்குத் தேர்வானேன் எனத் தெரியவில்லை. ஸ்பென்சர் ஜான்சன் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவர்தான் இங்கு இருந்திருக்க வேண்டும்.
மொத்தமாக, நாங்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டோம். தினமும் கற்றுக்கொள்கிறோம். இன்று பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டுள்ளோம். ஒருநாள் தொடரை இழந்து டி20 தொடரை முழுமையாக வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
I'm not sure how I got Man of the Match. I think Spencer Johnson should be up here says Mitchell Marsh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.