முகப்பு
கிரிக்கெட்

தன்னம்பிக்கை நாயகன்: சீசனில் முதல் பேட்டிங் வாய்ப்பிலேயே ஆட்ட நாயகன் விருதுவென்ற மணீஷ் பாண்டே!

ஆட்ட நாயகன் விருது வென்ற கொல்கத்தா வீரர் மணீஷ் பாண்டே குறித்து...

மணீஷ் பாண்டே. - படம்: ஏபி
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் மணீஷ் பாண்டேவுக்கு இந்த சீசனில் முதல்முறையாக பேட்டிங் வாய்ப்பு கிடைத்து, அதில் அவர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

ஐபிஎல் தொடங்கியது முதல் விளையாடிவரும் மணீஷ் பாண்டே (36 வயது) அதிகமான வாய்ப்பு கிடைக்காத வீரராகவே இருந்து வருகிறார்.

நேற்றிரவு ஈடர்ன் கார்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 147/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 148/6 ரன்கள் எடுத்து வென்றது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் மணீஷ் பாண்டே 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். நான்காவது போட்டியில் விளையாடிய அவருக்கு இந்தப் போட்டியில்தான் முதல்முறையாக பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உழைத்துக்கொண்டே இருக்கும் மணீஷ் பாண்டே குறித்து சமூக வலைதளத்தில் தன்னம்பிக்கை, உத்வேகம் மிகுந்த பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே, “போட்டிகளில் விளையாடாதபோதும் மணீஷ் பாண்டேவின் உழைப்பும் அவரது அணுகுமுறையும் மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.

summary

The Epitome of Self-Confidence: Manish Pandey—Winner of the 'Man of the Match' Award in His Very First Batting Opportunity of the Season!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.