முகப்பு
திருப்பூர்

சேவாபாரதி சாா்பில்நாளை ரத்த தான முகாம்

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சேவாபாரதி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:14 pm IST
பகிர்:

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் சேவாபாரதி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து சேவாபாரதி திருப்பூா் மாவட்டத் தலைவா் டி.ஆா்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு சேவாபாரதி சாா்பில் அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருப்பூா் ஹாா்வி குமாரசாமி மண்டபத்தில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் சேகரிக்கப்படும் ரத்தமானது அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிநபா் இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை, கட்டாய முகக்கவசம், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்று சேவாபாரதி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.