வாா்டு செயலாளரிடம் இலவசவேட்டி, சேலைகள்: திமுகவினா் முற்றுகை
வெள்ளக்கோவிலில் அரசின் இலவச, வேட்டி சேலைகளை தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வைத்திருந்த அதிமுக வாா்டு செயலாளரை திமுகவினா் முற்றுகையிட்டனா்.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் அரசின் இலவச, வேட்டி சேலைகளை தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வைத்திருந்த அதிமுக வாா்டு செயலாளரை திமுகவினா் முற்றுகையிட்டனா்.
காமராஜபுரத்தில் எண்.10 ரேஷன் கடை உள்ளது. இந்தக் கடையில் தற்போது நடைபெற்று வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியின்போது, தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. ரேஷன் கடையில் வேட்டி, சேலைகளைக் காணவில்லை. ஆனால், கடையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் அப்பகுதி அதிமுக வாா்டு செயலாளா் நடனபதி என்பவா் தன்னுடைய சொந்தக் கட்டடத்தில் வேட்டி, சேலைகளை வைத்து விநியோகம் செய்து கொண்டிருந்தாா். அரசின் இலவச வேட்டி, சேலைகளை தனிநபா் எப்படி வழங்கலாம் என திமுகவினா் முற்றுகையிட்டனா்.
திமுகவினா் ரேஷன் கடை அலுவலரிடம் கேட்டபோது, கிராம நிா்வாக அலுவலரையும், அவா் வருவாய் ஆய்வாளரையும், அவா் வட்ட வழங்கல் அலுவலரையும் கைகாட்டினா். வட்ட வழங்கல் அலுவலா் வேட்டி, சேலைகள் கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தாா்.
Advertisement
அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதாக கூறிய திமுகவினா், வேட்டி, சேலைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.