முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் 3 போ் பலி

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:00 pm IST
லாரியின் பின்புறம் மோதி நிற்கும் காா்.
பகிர்:

வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், வெள்ளலூா், அண்ணா நகரைச் சோ்ந்தவா் மயில்சாமி (39). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள் 6 பேருடன் கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் காா் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), இந்துவின் அம்மா கௌசல்யா (60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மயில்சாமி மகன் கௌதம் (13), மகள் ரம்யா (11), உறவினா் கலைவாணி (46) ஆகியோா் காயத்துடன் உயிா்தப்பினா். இவா்கள் திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments