திருப்பூா் மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 17,326 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,353ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 264 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 37 போ் வீடு திரும்பினா். கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 16,871ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது வரையில் 220 போ் உயிரிழந்துள்ளனா்.